Carte Manthirangal Endral Enna A. S. Gnanasambandan

Manthirangal Endral Enna

Limbă: tamilă
Legare: Carte broșată
Editura: Nilan Publishers
Disponibilitate: În depozitul extern
Expediem în 14-21 zile
69.47 lei
ஒலியுண்டாக்காத பொருளே உலகில் இல்லை. எல்லா அசைவுகளும் ஒலி உண்டாக்கும். அணு தொடங்கி அண்டம் ஈறாக உள்ள அ...

Informații despre carte

Limbă
tamilă
Legare
Carte - Carte broșată
Publicat
2026
Pagini
170
EAN
9788168767010
ISBN
8168767012
Enbook ID
53056090
Greutate
237
Dimensiuni
152 x 229 x 9

Descriere completă

ஒலியுண்டாக்காத பொருளே உலகில் இல்லை. எல்லா அசைவுகளும் ஒலி உண்டாக்கும். அணு தொடங்கி அண்டம் ஈறாக உள்ள அனைத்துப் பொருள்களும் சலித்துக் கொண்டே இருக்கின்றன. அந்த சலிப்பில் ஒலி தோன்றத்தானே செய்யும். எல்லா வற்றுக்கும் மூலமாக உள்ளது அணு என்று சொல்லுகிறது விஞ்ஞானம். அந்த அணு, பரமாணு (Proton) என்ற கருவையும் அதனைச் சுற்றி ஓயாது வட்டமிட்டுக் கொண்டிருக்கும் மின்னணுக்களையும் (Electron) கொண்டதாகும். இந்த மின் அணு பரமாணுவைச் சுற்றி ஓயாது ஓடிக் கொண்டிருந்தால் அதனால் ஒலி உண்டாகத் தானே செய்யும். இவ்வோட்டத்தில் ஒலி உண்டாகிறதா, உண்டானால் அது எப்படி வெளிப்படுகிறது என்பது பற்றி இன்றுவரை விஞ்ஞானிகள் கவலைப்படவில்லை; அது பற்றி ஆராயவும் இல்லை. ஒரு வேளை இந்த ஒலியைத் தான் ஆதிநாதம் என்று நம் முன்னோர்கள் கூறினார்களோ தெரியவில்லை.

எந்த ஒலியும் அதிர்வுகள் வடிவில் வெளிப் படுகிறது என்று கண்டோம். எழுத்துக்களுக்குள்ள இந்த ஒலி ஆற்றலைக் கண்ட நம் முன்னோர் இவற்றை ஒழுங்குபடுத்தி பல அதிர்வெண்களை உடைய எழுத்துகளை ஒன்று சேர்ப்பதன் மூலம் பல புதிய அதிர்வெண்களை உடைய சொற்களைத் தோற்று வித்தனர். இங்ஙனம் ஒன்று சேர்க்கப்பட்ட ஒலிகள் மனமாசைக் கழுவும் ஆற்றலுடையவை என்றும் கண்டனர். அந்த ஒலிக் கூட்டங்களுக்கு மந்திரங்கள் என்று பெயரிட்டனர்.

மந்திர ஒலிகள் நாம் நம் காதால் கேட்கக் கூடிய அதிர்வெண்களைக் கொண்ட ஒலிக் கூட்டமே யாகும். என்றாலும் சில எழுத்துக்களை ஒன்று சேர்ப்பதன் மூலம் அதிர்வெண்களின் அளவுகளைக் கணக்கிட்டு அவ்வெழுத்துகளை ஒன்று சேர்ப்பதன் மூலம் மந்திரங்கள் புதிய வடிவு பெறுகின்றன; மாபெரும் ஆற்றலைப் பெறுகின்றன.

Clienții care au cumpărat această carte au mai cumpărat și

131.89 lei
191.89 lei
66.95 lei

The Resilience Response

Dr Rachel Yehuda
143.19 lei